Homeஉடல் நலம்இப்படித்தான் சாப்பிடணும்!

இப்படித்தான் சாப்பிடணும்!

நாம் அனைவரும் தினமும் சாப்பிடுகிறோம். ஆனால், அதனை முறையாக சாப்பிடுகிறோம? நாம் சாப்பிடும் அனைத்தும் நமக்கு ஆற்றலாக மாற்றும் விதத்தில் சாப்பிடுகிறோமா? என்றால் அது கேள்விக்குறியாக தான் இருக்கும். இந்த கட்டுரையில் எப்படி சாப்பிட வேண்டும் என்று சில வழிகளை காணலாம்.

  1. பசித்த பின்புதான் சாப்பிட வேண்டும்.
  2. வயிற்றில் ஏதாவது சங்கடத்தை உணர்ந்தால்,  அந்த நேரத்தில் உணவைத் தவிர்க்கவும்.
  3. சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு  முன்பும், சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்தும் தான் தண்ணீர் குடிக்கவேண்டும்.
  4. சாப்பிடும்போது மற்றவர்களிடம் பேசக்கூடாது. தொலைக்காட்சி பார்ப்பது,  வானொலி கேட்பது, பத்திரிக்கை படிப்பது  ஆகியவற்றையும் தவிர்க்கவும்.
  5. உணவை மெதுவாக, நன்றாக மென்று, சுவைத்து சாப்பிட வேண்டும்.
  1. காலையில் சற்று அதிகமான சிற்றுண்டியும், மதியம் மிதமான உணவும், இரவில் குறைந்த அளவு உணவும் உண்பது மிகவும் நல்லது.
  2. இரவில் சாப்பிட்ட உடனே படுக்கைக்கு ச் செல்லக் கூடாது. இ து அஜீரணம், மாரடைப்பு ம ற் று ம் அசிடிட்டியை அதிகரி க்கச் செய்யும்.
  3. வாரத்திற்கு ஒருமுறை உணவைத் தவிர்த்து உண்ணாவிரதம் இருத்தல் நல்லது.
  4. உணவு உண்ட உடனேயே பழங்கள் உண்பதைத் தவிர்க்க வேண்டும். காலை, மதியம், இரவு போன்ற முக்கிய உணவு உண்ணும் நேரங்களுக்கு இடையில்தான் பழங்களை உண்ண வேண்டும்.
  5. காலை 7 மணி, 11 மணி, மாலை 4 மணி என பழங்களை உண்டால் பழத்தின் முழுப்பலனையும்  பெறலாம்.
  1. மது மிகச் சிறிதளவு என வாரத்திற்கு ஓரிரு முறை அருந்துவதில் தவறில்லை. எனினும்  உங்கள் உடல்நலனைப்பொறுத்தும், குடும்ப டாக்டரை கலந்து ஆலோசித்தும் இதைப் பற்றி முடிவு எடுப்பது நல்லது
  2.  அசைவ உணவை அறவேதவிர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்கள் உடலில் இருக்கும் நோய்களைப் பொறுத்து குடும்ப டாக்டர் இதுபற்றி தகுந்த ஆலோச னை கொடுப்பார்.

இப்படி சாப்பிடுவதால் நாம் உண்ணும் அனைத்தும் நமக்கு ஆற்றலாக மாறும். நாமும் ஆரோக்கியத்துடன் வாழலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read